Header Ads



முஸ்லிம் பிரதேசங்களிலும், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்


(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்)

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி, பசிலே வெளியேறு போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பேரணியாக சென்றவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை கட்டுப்படுத்தும் வேலைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தமையை காண முடிந்தது. 

2 comments:

  1. People of Kalmunai should call for the Resignation of their MP Harris, otherwise known as 'Kaaval kaaran' who, along with other SLMC MPs, have Badly let down the community by continued support to this anti Muslim, Failed Govt. 'Go Home Kaaval kaaran' will be an appropriate slogan.

    ReplyDelete
  2. ஏன் வேருபடுத்திக் காட்டுகிரீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.