Header Ads



நஸீர் அஹமட் ஓர் அவமானச் சின்னம், நடவடிக்கை எடுப்போம் என்கிறார் ஹக்கீம்


முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்  , கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட  உறுப்பினர்கள் நால்வரையும் கட்சியில் அவர்கள்  வகித்த பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது. கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் வெள்ளிகிழமை (22) உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.


ஊடகப் பிரிவு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

9 comments:

  1. Let's await and see your action on heroic verses

    ReplyDelete
  2. You are behind all these Hakim,you are a big lier. We don't trust you guys anymore

    ReplyDelete
  3. அவமானச்சின்னத்தை தலையில் வைத்துக் கொண்டு கடந்த பல ஆண்டுகளாக ஆடினீர்கள். இப்போது பொதுமக்களின் வெறுப்பு அதிகரிக்கும் போது பொதுமக்கள் சாரந்து இருப்பது போன்று நடிக்கின்றீர்கள். இது யார் யாரை ஏமாற்றுவது? இனி போதும் இந்த முனாபிக் நாடகம். இந்த நாட்டு வாலிபர்கள் இந்த முனாபிக் நாடகத்துக்கு விரைவில் முடிவு கட்டுவார்கள்.

    ReplyDelete
  4. இனியும் நம்பி ஏமாற மக்கள் மடையர்கள் அல்ல.

    உங்களின் கபட நாடகத்தை விட்டு விடுங்கள். இல்லையென்றால் மக்கள் உங்கள் அனைவரையும் அனுப்பி விடுவார்கள் வீட்டிட்கு.

    ReplyDelete
  5. இவர் சொல்லும் ஒழுக்காற்று நடவடிக்கை என்பது என்ன?

    ReplyDelete
  6. இவர் சொல்லும் ஒழுக்காற்று நடவடிக்கை என்பது என்ன?

    ReplyDelete
  7. When??? Yes, you will take action but no date. It looks like to me 2072 December 35??? Is this enough for you???

    ReplyDelete
  8. கிழிப்பீக

    ReplyDelete
  9. இலங்கையில் வசிக்கும் முஸ்லிம்களில் அநேகர்,  முஸ்லிம் கட்சிகளையும்,  அதன் தலைவர்களையும் அவமானச் சின்னமாகவும், துரோகிகளாவுமே பார்க்கின்றனர், என்பதை தாங்கள் அறிவீர்களா? உங்கள் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை யாவும் மேற்கொள்ளப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கும்வேளை  சிலவேளை நாமல் ராஜபக்ச  ஜனாதிபதி பதவியில் இருப்பார். அல்லது நீங்கள் தலைவர் பதவியில் இல்லாதிருப்பீர்கள்.
    பார்ப்போர் எவரையும் சொக்கவைக்கும் உங்கள் வசிகரமும், தங்களின் மும்மொழி ஆற்றலும், தங்களின் கணவான் தோற்றமும் நீங்கள் எதைக் கூறினாலும் முஸ்லிம் மக்களை நம்பவைக்கிறது. நஸீர் அகமட் தங்களின் பாசறையில் புடம் போட்டு வளர்க்கப்பட்ட ஓருவர் தானே. அத்துடன் உங்கள் மந்தையில் உள்ள ஒரு கருப்பு நிற ஆடு. அவ்வளவுதான்  இதில் அலட்டிக்கொள்ள ஒன்றும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.