Header Ads



கோட்டாபய இராஜினாமா செய்தால், தலைமறைவாகியுள்ள பசில் ஜனாதிபதியாகி விடுவார் - மஹிந்தவே பதவி விலக வேண்டும்

 


கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியிலிருந்து தற்போதைக்கு இராஜினாமா செய்யக்கூடாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவி விலகினால், அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

இவ்வாறான நிலையில் தற்போது தலைமறைவாக உள்ள பசில் ராஜபக்ச வந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டி ஜனாதிபதியாக பதவியேற்கும் அபாயம் உள்ளது.

எனவே, ஜனாதிபதியை சிறையில் அடைத்துவிட்டு சில காலம் முன்னோக்கிச் செல்வதையே செய்ய வேண்டும்.பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.