Header Ads



அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறு நபர்களுக்கு கேன்கள் மற்றும் பெரல்களில் எரிபொருள் விநியோகிக்கப்படாது


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறு நபர்களுக்கு கேன்கள் மற்றும் பெரல்களில் எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டை தடுப்பதற்கும் பல்வேறு மோசடிகளை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, கைத்தொழில் நோக்கங்களுக்காக கேன்கள் மற்றும் பெரல்களுக்கு எரிபொருளை பெற அவசியமானால், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு கமநல சேவை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.