Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடி நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு வலியுறுத்தி இன்று (03) மாலை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன் போது தீப்பந்தம் ,பதாகைகள் ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர் .

அவசரகால நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்ட உத்தரவு என்பனவற்றையும் பொருட்படுத்தாது தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.