Header Ads



சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி, இடையூறு ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க கோரிக்கை


கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் நாளொன்றிற்கு சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 1,300 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளதாக அந்தச் சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அதனால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், வீதி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.