Header Ads



றம்புக்கணயில் சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியை - பாதுகாப்புக்காக இராணுவத்தினர் குவிப்பு


றம்புக்கணயில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை  இடம்பெறவுள்ளன.

இதனையடுத்து றம்புக்கண, கேகாலை மற்றும் தெவலேகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் பொது பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்கு இராணுவத்திற்கு உதவுமாறு காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பாதுகாப்பு செயலாளரிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து அப்பகுதிகளில் இராணுவத்தை களமிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.