Header Ads



பிரதமரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மறுத்தாரா..?


பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில்,அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசரமாக இன்று இரவு சந்திக்கவுள்ளார். 

நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

இருப்பினும்,பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவி விலகியமை தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.