Header Ads



நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, சில அதிகாரிகளை கையாள்வது மிகவும் கடினம் - பந்துல


நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அதனை நிராகரித்ததாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஜனாதிபதி நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு அழைப்பை விடுத்ததாகவும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பதவியை ஏற்க வேண்டாம் என தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் குறிப்பிட்ட சில அதிகாரிகளை கையாள்வது மிகவும் கடினமானது எனவும் இவ்வாறான சூழலில் பொறுப்புகளை நிறைவேற்றுவது மிகவும் கடினமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   

No comments

Powered by Blogger.