Header Ads



இப்படியும் ஒரு, நல்ல உள்ளமா...?


அது   சென்னையின்  இதயப் பகுதியான  போயஸ் கார்டனில் உள்ள  ஒரு  பிரமாண்டமான வீடு.

அந்த வீட்டின்  நுழைவாயிலில்  ஒரு  கல்வெட்டு.  அதில்  எழுதப்பட்டிருக்கும்  வாசகம்   அந்த வீட்டின்  உரிமையாளர் மனதை  உலகுக்கு சொல்லும் திரு வாசகம். 

அவர் இறைவனிடம் கேட்கிறார்  "யா அல்லாஹ்  இந்த வீட்டுக்கு வரும் அனைவருக்கும்  இதைவிட அழகிய இல்லங்களை இந்த உலக வாழ்க்கையிலும், மறுமையிலும்  வழங்குவாயாக..." என்று  துவா (பிரார்த்தனை)  செய்கிறார்......

ஆச்சரியமாக இருக்கிறது......

நமது வீடுதான்  பெரிய வீடாக  இருக்க வேண்டும். நாம் மட்டுமே  நன்றாக  வாழ வேண்டும்  என்ற  எண்ணம்  கொண்ட   மனிதர்களுக்கு மத்தியில்  எல்லோரும்  வாழ வேண்டும்  அதிலும்  தன்னை விட சிறப்பாக  வாழ வேண்டும்  என்ற  எண்ணம்  கொண்ட   இந்த மனிதர்  நிச்சயமாக  ஒரு  வித்தியாசமான மனிதரே.  

அந்த வீட்டின்  உரிமையாளர்  சென்னை முத்துப்பேட்டை ரஹ்மத்  அறக்கட்டளை  நிறுவனர்  அண்ணன்  M.A.முஸ்தபா  அவர்கள்.......

நன்றி

சிவசங்கர்

No comments

Powered by Blogger.