கொழும்பில் திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களும் - தொலைபேசிகளை முடக்கும் ஜேம்மர் ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் வைப்பு
அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையி்ல், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வெளியாருடன் தொடர்பு கொள்ள முடியாத வகையில்,தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்குழில்கள் யாவும் நேற்றிரவு கழற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தொலைபேசிகளை முடக்கும் ஜேம்மர் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுகின்றது.
ஜனாதிபதி செயலக நுழைவாயிலேயே இந்த ஜேம்மர் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment