Header Ads



அதிகாரிகளும், போராட்டக்காரர்களும் வன்முறை வழியில் செல்ல வேண்டாம் - நாமல் கோரிக்கை


எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாக அமையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை பிரதேசத்தில் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாம் எந்த பக்கத்தில் இருந்தாலும் வன்முறை பிரச்சினைனகளுக்கு தீர்வு கிடையாது எனவும்,நமது நாடு போதியளவு வன்முறைகனை சந்தித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லா நேரங்களிலும் சமாதானத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரிகளும் போராட்டக்காரர்களும் வன்முறை வழியில் செல்ல வேண்டாம் என தாம் கோரிக்கை விடுப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. பொதுமக்களின் சொத்தைச் சூறையாடி கிரிப்டோ கரன்ஸியில் பதுக்கிவைத்திருக்கும் 48 பில்லியன் டொலர்களையும் திருப்பி திறைசேரியில் முதலில் ஒ்ப்படைக்கவும். அப்போது நாட்டின் அடிப்படைப்பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  2. நீர் கிரிப்டோ கரன்ஸியில் பதுக்கிவைத்திருக்கும் பொதுமக்களிடமிருந்து சுரண்டிக் களவாடிய நாற்பத்தியெட்டு பில்லியன் டொலர்களையும் திருப்பி திறைசேரிக்கு ஒப்படைத்துவிட்டு உடுப்பைத் தயார்படுத்திக் கொள் நிரந்தரமாக சிறையில் கழிப்பதற்கு.

    ReplyDelete

Powered by Blogger.