Header Ads



பிரதமர் மஹிந்தவும், அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டும் - ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் டலஸ்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை இன்று (22) பிற்பகல் அனுப்பிவைத்துள்ளார்.

பதவி விலகியதன் பின்னர்,  அனைத்துக்கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும். அதன் அமைச்சரவை  சிறியதாக    அமையவேண்டும்.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இதில் ஆராயப்படவேண்டும்.” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.