Header Ads



சோகம் நிறைந்த கண்ணீருடன் ஈஸ்டர் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்த மக்கள் (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனையுடனான கவனயீர்ப்பு போராட்டம்  கல்முனை மெதடிஸ்ட திருச்சபை வளாகத்தில்  வியாழக்கிழமை (21) மாலை இடம்பெற்றது.  கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்,  பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நண்பர்கள் என  கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் பெரிய கல்லாறு மெதடிஸ்ட திருச்சபையின் அருப்பணி எஸ்.டி வினோத் கல்முனை மெதடிஸ்ட திருச்சபையின்  அருட்பணி சுஜிதர் சிவநாயகம் ஆகியோர் இங்கு கருத்துரைகளை வழங்கிய பின்னர் அமைதியாக இக்கவனயீர்ப்பு போராட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.