Header Ads



பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுக்கு பதில் அனுப்பினார் ஜனாதிபதி


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுக்கும் பதில் அனுப்பியுள்ளார்

இது தொடர்பான கடிதம் பௌத்த அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் நேற்று காலை மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் இன்னும் வெளியாகவில்லை.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்ப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைத்திருந்தனர்

அதில், புதிய அமைச்சரவை தீர்வாகாது என்றும் உரிய தீர்வு இன்றேல், சங்க கட்டளையை பிறப்பிக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.

No comments

Powered by Blogger.