Header Ads



இலங்கையின் நெருக்கடியை தீர்க்க உதவுவதற்காக தூத்துக்குடியில் யாசகம் பெற்ற இந்தியர்


தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் யாசகர் ஒருவர் 20000 இந்திய ரூபாயை திரட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் இந்த தொகையின் பெறுமதி 83 ஆயிரம் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தூத்துக்குடியை சேர்ந்த பூல்பாண்டி என்ற யாசகர் பணத்தை வசூலித்து சென்னை மாவட்ட செயலகத்திடம் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த யாசகர் கொரோனா காலத்தில் உணவு வாங்க முடியாத மக்களுக்காக யாசகம் பெற்று பணத்தை வழங்கியவர் என குறிப்பிடப்படுகின்றது.

அவர் 2020 ஆம் ஆண்டு ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “என்னைப் போல யாரும் யாசகம் பெறும் நடவடிக்கைக்கு செல்ல கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

நான் ஏழைகளுக்காக யாசகம் பெற்று உதவ முடியும். நான் பணத்தை விரும்பாத மனிதன். அதனால்தான் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.