Header Ads



அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கம் அமைப்பதே சிறந்த தெரிவாக இருக்கும்


அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெருமவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ட்விட்டர் பதிவில், அமைச்சரவை பதவியை ஏற்கமாட்டேன் என்ற எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதே சிறந்த தெரிவாக இருக்கும் என நான் நம்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.