Header Ads



ரம்புக்கனை துயரம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன், அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமைக்கு பாதிப்பு ஏற்படாது - வன்முறைகளை தவிருங்கள்


அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு குந்தகம் ஏற்படாது,

ரம்புக்கனையில் இடம்பெற்ற இடம்பெற்ற சம்பவம் குறித்து இலங்கை பொலிஸார் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுப்பார்கள் - இந்த சம்பவம் காரணமாக இடம்பெற்ற துயரம் குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்போது வன்முறைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அனைத்து பொதுமக்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.