சியம்பலாபிட்டியின் ராஜினாமாவை நிராகரித்த ஜனாதிபதி - காரணம் என்ன தெரியுமா..?
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய ரஞ்சித் சியம்பலாபிட்டியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாராளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்தும் பேணுமாறு அவரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு நேற்று (05) கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிரதி சபாநாயகர் பதவி சுயாதீனமான பதவி என்பதனால் தற்போதைக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்வது அத்தியாவசியமானது எனவும் அதற்கமைய ராஜினாமா கோரிக்கையை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததையடுத்து, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக தீர்மானித்ததாக ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
Post a Comment