Header Ads



நீர்கொழும்பு ஆவே மரியா கல்லூரி ஆசிரியர்கள், அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு ஆவே மரியா கல்லூரி ஆசிரியர்கள் நேற்று 25ம்திகதி அரசாங்கத்துக்கு எதிராக    ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை  நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நீர்கொழும்பு  நகர மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் ஆரம்பித்து அங்கிருந்து பேரணியாக நீர்கொழும்பு கச்சேரி முன்பாக வந்தடைந்தது அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக 

சுலோக அட்டைகளை ஏந்த கோஷங்களை எழுப்பினார்கள்.  

கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகள், எரிபொருள் அதிகரிப்பு காரணமாக அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை, மாணவர்களுக்கான பாட புத்தக குறைபாடுகள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சூத்திரதாரிகளை நீதியின் முன் இதுவரை நிறுத்தாமை போன்ற பல விடயங்களை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பின்னர் பேரணியாக அங்கிருந்து மீண்டும் கல்லூரியை நோக்கி சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் நேற்று சுகயீன விடுமுறையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.