Header Ads



அலரி மாளிகை முன் போராட்டம் தொடருகிறது - நிறுத்தக் கோரும் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்


அலரி மாளிகைக்கு முன்னாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினரை அப்புறப்படுத்தல் தொடர்பாக பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் குழுவினரை அப்புறப்படுத்துமாறு கோரி கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், இதனை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷண கெகுணவல, இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.