Header Ads



510 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம் - அலி சப்ரி


அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஹிரு ரீவியில் நேற்றிரவு ஒளிபரப்பான சலகுண அரசியல் நிகழ்ச்சியில், கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அதேநேரம், எதிர்வரும் இரண்டு வாரக்காலப்பகுதிக்குள் சமையல் எரிவாயு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிப்பதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அடுத்து வரும் இரண்டு வாரங்களில் ஐநூறு மில்லியன் டொலர்களும் முடிந்தபிறகு என்ன செய்யப் போகின்றீர்கள். பிச்சைக்காரனை விடவும் மோசமான நாடாக நீங்கள் அனைவரும் சேரந்து இந்த இலங்கை நாட்டை மாற்றிவிட்டீர்கள்.

    ReplyDelete
  2. இது ஒரு மாதம் தான் காணும்

    ReplyDelete
  3. இவருக்கு டொம்பசயா தொழிலும் தற்போது கிடைத்துள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.