Header Ads



37 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை: அவசரமற்ற சத்திரசிகிச்சைகளும் பிற்போடப்பட்டுள்ளது


குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படவிருந்த அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வைத்தியசாலை கட்டமைப்பில் இல்லாத மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

இதன்போது, 646 அத்தியாவசிய மருந்துகளில் 37 மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.