Header Ads



21ஆவது திருத்தம் பிரதமரினால், இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு


அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய தினம் -25- பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினால் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம்  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை ஜனாதிபதியினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டமாக இன்றைய அமைச்சரவை கூட்டம் அமையவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய தினம் பிரதமரினால் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிக்கப்படவுள்ள அதேவேளை,ஏற்கனவே நடைமுறையில் உள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் நிறைவேற்று அதிகாரங்கள் அதன் மூலம் இல்லாதொழிக்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கிணங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பாக முன்வைத்துள்ள யோசனைகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கிணங்க அந்த யோசனைகளும் இன்றைய தினம் பிரதமரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.அதேவேளை எதிர்வரும் 28ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்போது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் அடுத்து வரும் அமர்வுகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 40 எம்பிக்கள் கடந்த வாரம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனைகளை சபாநாயகரிடம் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


 


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.