கட்டுநாயக்க - பஹ்ரைன் இடையில் இயக்கப்படும் 2 விமான சேவைகள் இடைநிறுத்தம்
இரண்டு விமான சேவைகளை திடீரென இடைநிறுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது.
அதன்படி, யூஎல் 201 மற்றும் யூஎல் 202 என்ற விமான இலக்கங்களின் கீழ் இயங்கும் இரண்டு விமான சேவைகளை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் இடைநிறுத்த இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க மற்றும் பஹ்ரைனுக்கு இடையில் இயக்கப்படும் விமான சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளது.
Post a Comment