Header Ads



யாழ்ப்பாணத்தில் விபத்து - 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு


- எம். றொசாந்த் -

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் புகையிரதமும் பட்டா ரக வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர்  உயிரிழந்துள்ளனர். 

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. 

பட்டா ரக வாகனத்தில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர். 

1 comment:

  1. Very sad news,

    Tamil politicians, parliamentarians, provincial and local councils must be held accountable for every incident and death.

    If they can't even find a solution to the railway crossing, how can they solve other major problems?

    What is the use of holding positions and chairs ??

    ReplyDelete

Powered by Blogger.