தனது 1 வயது குழந்தைக்கு பால்மா வாங்க முடியாத நிலை - தற்கொலைக்கு முயன்ற தந்தை
பொகவந்தலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கேம்பியன் எல்டொப்ஸ் தோட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான செல்வநாயகம் புவேந்தரன் என்பவர் 80 மீற்றர் உயரமான கோபுரத்தில் கடந்த 4 ஆம் திகதி மாலை 6 மணியளவில் ஏறியுள்ளதாக அப்பகுதி மக்கள் பொகவந்தலாவ காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக செயற்பட்ட பொகவந்தலாவ காவல்துறை உத்தியோகத்தர்கள் தொலைத்தொடர்பு கோபுரத்தில் நின்றிருந்தவரின் மனைவியை ஸ்தலத்திற்கு வரவழைத்து, கணவனை கீழே இறங்குமாறு பல தடவைகள் ஒலிபெருக்கியில் முறையிட்டு இறக்கியுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சுமார் 1 வயதுடைய தனது குழந்தைக்கு பால் மா கூட வாங்க முடியாத நிலையிலேயே தற்கொலைக்கு முயன்றதாக செல்வநாயகம் புவேந்திரன் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
Post a Comment