Header Ads



மலேசியா, இந்தோனோஷிய தூதுவர்களை சந்தித்து நிகழ்கால நிலமைகள் தொடர்பில் இம்தியாஸ் Mp பேச்சு


இலங்கைக்கான மலேசியாவின் உயர்ஸ்தானிகர் Tan Yang Thai அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நேற்றைய(29) தினம் சந்தித்து இலங்கை தற்போது எதிர்கொள்ளும் நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.

1997 ஆம் ஆண்டில் ஆசிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்த மலேசியா,அதனை தீர்த்த விதாம் குறித்தும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை மலேசியா எதிர்கொண்ட விததத்தை இலங்கையின் தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டு தற்போதைய நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசியுள்ளனர்.  மலேசியாவை போன்று வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இவ்வாறே நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டும் எனவும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இதன் போது தெரிவித்துள்ளார்.

2

இந்தோனோஷிய தூதுவர் Dewi Gustina Tobin மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று இன்று(30) நடைபெற்றது.



No comments

Powered by Blogger.