Header Ads



கோட்டாபயவின் அழைப்பை JVP நிராகரிப்பு, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கமாட்டோம் என அறிவிப்பு (வீடியோ)


எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. 
அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் குறித்த சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருந்தனர். 

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சகல கட்சிகளிடம் இருந்து யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சர்வ கட்சி மாநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தது.

இதற்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த முறை சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.