சிலிண்டர் பெற வரிசையில் நிற்கும் மக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்புவது தொடர்கிறது (வீடியோ)
- பாறுக் ஷிஹான் -
நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நுகர்வோர் அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இன்றும் (13) நேற்றும் (12) அம்பாறை மாவட்டத்தில் உள்ள நற்பிட்டிமுனை லிட்ரோ எரிவாயு விநியோக நிலைய மொத்த விற்பனை நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட சுமார் 600 க்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு ,பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் உள்ள களஞ்சியசாலையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து அங்கு எரிவாயு கொள்வனவு செய்ய வருகைதந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த உத்தியோகத்தர்களினால் நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
Post a Comment