Header Ads



வரிசைகளில் நிற்பவர்கள் ராஜபக்‌ஷர்களை சபிக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும்


எமக்கு காதுகள் நன்றாக கேட்கிறது. கண்களும் நன்றாக தெரிகிறது எனத் தெரிவித்த அமைச்சருமான சமல் ராஜபக்‌ஷ . அத்தியாவசிய பொருள்களுக்காக வரிசைகளில் நிற்பவர்கள் ராஜபக்‌ஷர்களை சபிக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும் என்றார்.

  “நாட்டின் தற்போதையப் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுப்படுத்த வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன” என்றும் அவர் சொன்னார்.

நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்த வில்லை அதனால்தான் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும் நாட்டின் தற்போதைய நிலைமைகளை கவனமாகக் கையாள வேண்டும் என்று தெரிவித்த அவர், நாட்டில் தற்போது அந்நிய செலாவணி, டொலர் பிரச்சினைகளே காணப்படுகின்றன என்றார்.  


No comments

Powered by Blogger.