Header Ads



என்னை கைது செய்ய தயாராகி வருகின்றனர் - ஹிருணிகா


தான் உட்பட சிலரை குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்ய தயாராகி வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வசித்து வரும் வீட்டிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் தன்னை கைது செய்ய தயாராகி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்யுமளவுக்கு தாம் உள்ளிட்டோர் எந்த குற்றத்தையும் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு பேசி ஹிருணிகா, ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.