Header Ads



"நிமல் லான்சாவின் வெளியேற்றமானது சாதாரண சம்பவம் அல்ல, ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாடு ஏமாற்று"


ராஜபக்ச அரசு விரைவில் கவிழும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நிமல் லான்சாவின் வெளியேற்றமானது, சாதாரண சம்பவம் அல்ல. அரசிலிருந்து பெருமளவானோர் வெளியேறவுள்ளனர் என்பதற்கான ஆரம்பக்கட்ட சமிக்ஞையே அது. அரசு மீது பலர் அதிருப்தியில் உள்ளனர்.

அவர்கள் விரைவில் வெளியேறுவார்கள். எனவே, இந்த அரசு விரைவில் கவிழும். ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாடு, ஏமாற்று அரசியலின் ஓர் அங்கமாகும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.