Header Ads



அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை, ஜனாதிபதிக்கு கடிதம்மூலம் அறிவிக்கவுள்ளேன்


எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் தாம் பங்கேற்க போவதில்லையென ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இன்று (06) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்மூலம் நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் விமல்வீரவங்ச ஆகியோர் விடயத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் வரையில் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அண்மையில் அறிவித்திருந்தார்.


No comments

Powered by Blogger.