Header Ads



எண்ணெய் வந்துவிட்டது, மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டாம், மக்களுக்கு பிரச்சனை ஏற்பட இந்த அரசு இடமளிக்காது.


நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை இன்று (05) முற்பகல் திறந்து வைக்கப்படும் நிகழ்வில் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆற்றிய உரையின் ஒரு பகுதி

நாரம்மல பிரதேசத்திற்கு போன்றே மக்களுக்கும் மிகவும் தேவையான நிர்வாக கட்டிடமே இன்று கிடைத்துள்ளது. முன்பு எமது பிரதேச சபை ஒரு கூடாரக் கொட்டகையாகவே காணப்பட்டது.

பிரதமர் அவர்களே, நீங்கள் இந்நாட்டை மாற்றினீர்கள். இந்த போரை மாத்திரமல்ல. நீங்கள் போரை காரணம் காட்டி நாட்டை கட்டியெழுப்ப தவறவில்லை. நீங்கள் போர் இடம்பெறும் போதே நாட்டையும் அபிவிருத்தி செய்தீர்கள்.

போரை காரணங்காட்டி ஆயுதம் கொள்வனவு செய்ய வேண்டும், பாதணிகளை கொள்வனவு செய்ய வேண்டும், சீருடை கொள்வனவு செய்ய வேண்டும் என்று அவற்றை சுட்டிக்காட்டி நாட்டின் அபிவிருத்தியை மறைக்கவில்லை.போர் இடம்பெறும் போதே இந்நாட்டை புதிய நாடாக மாற்ற நீங்கள் நடவடிக்கை மேற்கொண்டீர்கள். அதன் மூலமே புறநெகும தோற்றம் பெற்றது. புறநெகும ஊடாக நகரிலுள்ள நகர சபை, பிரதேச சபைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. அரசாங்க அதிபர் அலுவலகம், உள்ளூராட்சி சபைகளையும் நீங்கள் மறக்கவில்லை.

குருநாகல் நகரில் இன்று காணப்படுவது பழைய அரசாங்க அதிபர் அலுவலகமல்ல. கொழும்பிலும் அவ்வாறே. பல நகரங்களிலும் அந்த நிர்வாக கட்டிடங்களை புனரமைத்து நாட்டிற்கு ஏற்ற வகையில் அமைத்தீர்கள். அதன் பின்னர் கிராம மக்களுக்கான வீதிகள் புனரமைக்கப்பட்டன. 

இலங்கையில் நெடுஞ்சாலை கலாசாரம் இருக்கவில்லை. வெளிநாடு சென்ற பலரும் அதனை பார்த்தனர். மற்றவர்கள் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்தார்கள். எங்களுக்கு இது ஒரு கனவாகவே இருந்தது. அந்த கனவை நீங்கள் நனவாக்கினீர்கள். அது மட்டுமல்ல, அடுத்த கட்டமாக நீர்ப்பாசன முன்மொழிவுகள். தெதுரு ஓயா திட்டத்தை எமது மாவட்டத்தில் உங்களால் கூட நம்ப முடியவில்லை. மேலாக பறந்து செல்லும் போது பெரிய கடல் போல் இருக்கிறது என்று நீங்களே கூறினீர்கள். இவ்வளவு நீர்ப்பாசனத் திட்டங்களை நீங்கள் உருவாக்கினீர்களா? இவை மட்டும் உருவாக்கப்படவில்லை. விவசாயிகளின் பொருளாதாரம் வலுப்பெற்றது. 8, 9 ரூபாய்க்கு காணப்பட்ட ஒரு கிலோ நெல் விலை ரூபாய் 40 வரை உயர்த்தப்பட்டது.

அப்போது விவசாயிகள் வந்து விஷம் அருந்தி உயிரிழக்க போவதாகச் சொல்லவில்லை. அப்படி ஒரு சகாப்தம் இருக்கவில்லை. விவசாயிகள் குறித்து தேடிப் பார்த்தார். அரச அதிகாரிகள் குறித்து தேடிப்பார்த்தீர்கள். நிர்வாக கட்டிடங்கள் குறித்து ஆராய்ந்தீர்கள். அடுத்து அரச துறைக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்தீர்கள். அதுதான் உருவாக்கப்பட்ட புதிய கலாசாரம். உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல் நம் நாடு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை உங்களுக்கு இருந்தது.

அமெரிக்க குடிமக்களும் வேலை இழந்தமை எமக்கு நினைவிருக்கிறது. வீட்டுக்கடனை கட்ட முடியாமல் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பொருளாதாரமும் சரிந்தது.

அன்று போல் இப்போதும் டொலர் பிரச்சனை. போர் செய்ய பணம் இல்லை. ஆனால் நீங்கள் அதையெல்லாம் வென்றீர்கள். போரிட முடியாத போர் முடிவுக்கு வந்து உலகிற்கு காட்டப்பட்டது. அதன் பிறகு உங்களது வளர்ச்சியால் அந்த சவால்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அவதூறாகப் பேசின. 

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் நீங்கள் ஜனாதிபதியாக இருந்திருந்தால் எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்காது. நீங்கள் உருவாக்கிய பொருளாதாரம் அழிக்கப்பட்டது. நீங்கள் உருவாக்கிய தேசிய பாதுகாப்பு அழிக்கப்பட்டது. அதனால்தான் டொலர் இல்லாது போனது. ஐ.எஸ்.ஐ.எஸ். சஹ்ரான் தாக்குதலுக்கு பிறகுதான் இந்த நாட்டிற்கு வெளிநாட்டவர்கள் வரவில்லை. அங்குதான் டொலர் கையிருப்பு குறைய ஆரம்பித்தது. அதற்கு முன்னர்  அவர்கள் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்திருந்தனர்.

இன்று காலை நிதி அமைச்சரிடம் பேசினேன். எங்களுக்கு தற்போது எவ்வித எண்ணெய் பிரச்சினையும் இல்லை. எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை விடுமுறை. பொதுவாக அன்றைய தினம் எண்ணெய் விநியோகம் செய்யப்படுவதில்லை. மக்கள் கவலை கொள்ள வேண்டாம் என பொறுப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டாம். எண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு காண்போம். எண்ணெய் வந்துவிட்டது. மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட இந்த அரசு ஒருபோதும் இடமளிக்காது.

1 comment:

  1. அமைச்சர் அவருடய வீட்டுக் கிணற்றிலிருந்து அள்ளிக் கொடுத்திருக்கார் போல ...

    ReplyDelete

Powered by Blogger.