Header Ads



பொய்யான காணி உறுதிகளை தயாரித்து, நிலங்களை விற்பதற்கு முயற்சி - எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்


யாழ்பாணம் ஐந்து சந்தியில் உள்ள, சிலர் வேறு நபர்களுக்கு சொந்தமான காணிகளுக்கு, சில பொய்யான உறுதிகளை தயாரித்து காணிகளை விற்பதற்கு முயற்சித்து வருகின்றனர். 

அதன் அடிப்படையில் யாழ்பாணம் இல 153/12, நாவலர் வீதியில்  இரு‌க்கு‌ம் தனி நபருக்கு சொந்தமான காணிக்கு பொய்யான உறுதி போட்டு விற்கப்பட உள்ளது.

இந்த காணிக்குள் அத்துமீறி சென்று பெறுமதியான வேம்பு மரங்களை வெட்டி, விற்றும் உள்ளனர். 

இதற்கான முறைப்பாடுகள் பொலிஸிலும், நீதிமன்றத்திலும் செய்யப்பட்டுள்ளதுடன், இது சம்பந்தமாக பத்திரிகையில் தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, இவ்வாறான காணிகளை யாரும் வாங்க வேண்டாம் என்று அறியதருகிறோம்

சமூக நலன் விரும்பி

No comments

Powered by Blogger.