Header Ads



ரணிலை பிரதமராக நியமிக்கும் அளவுக்கு, எமது கட்சியில் முட்டாள்கள் இருப்பார்கள் என நம்பவில்லை


ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு எந்தவொரு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் தற்போது அந்தப் பதவியை வகித்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் தொடர்பில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் அளவுக்கு தமது கட்சியில் உள்ளவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்று நினைக்கவில்லையென தெரிவித்தார்.


1 comment:

  1. நீங்கள் எல்லோரும் நடிகர்கள். உங்கள் நடிப்பில் இந்த நாட்டு மக்கள் சலிப்படைந்து சோர்வுற்று, நலிந்து, மனவிரத்தியடைந்து செய்வதறியாது தலைசுற்றப்பட்டவர்களாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பது உங்களைப் போன்ற நடிகர்களின் கண்களில் படாது. ஏனெனில் உங்கள் நடிப்பின் பின்னால் இருப்பது மாபெரும் சுரண்டல்,களவு,சூறையாடல் எனவே, உங்கள் திரைக்குப்பின்னால் இயக்கத்தைச் சரியாக நடாத்துவது மட்டும்தான் உங்கள் பணி.நடிப்பும் நாடகமும் உங்கள் தொழில்.

    ReplyDelete

Powered by Blogger.