Header Ads



பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் - மஹிந்த


பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுன கட்டாயமாக வெற்றிப்பெறும். ரணில் மற்றும் சஜித்துடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகள் எதுவுமே என்னிடத்தில் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அரசாங்கம் என்பது பொய்யாகும் என்றார்.

No comments

Powered by Blogger.