Header Ads



பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்குமளவுக்கு, எமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது


பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை வகிப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் கூறியுள்ளார்.

இன்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குமளவுக்கு தமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது என நினைப்பதாக, அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கூறியுள்ளார்.

1 comment:

  1. இது பற்றி பொதுமக்களுக்கு எந்தக் கரிசனையும் இல்லை, உமது கட்சியே இந்த வதந்தியைப் பரப்பிவிட்டு நீமரே கருத்துத் தெரிவிக்கின்றீர் பொதுமக்களுக்கு இது ஒரு பிரச்சினையே இல்லை. உடனடியாக பொதுமக்களுக்கு எரிவாயுவை வழங்கு, பெற்றோல் நெருக்கடியை நீக்கு, பொருட்களின் விலையைக் குறை இது தான் எங்கள் பிரச்சினை.

    ReplyDelete

Powered by Blogger.