எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால், நாடு பற்றி எரியும் - வீரவன்ச
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றி எரியும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க வேண்டாமென பசில் கூறினார். அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்கவிடமாட்டார்கள் என்பதாலேயே பசில் அவ்வாறு கூறினார் என்றார்.
பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில் திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு அமைப்பின் பிரதானியின் மகன் எனவும் தெரிவித்தார்.
இலங்கைக் கேட்கும்போதெல்லாம் கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகள் இந்தியாவக்கு இருக்காதா? லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
சீனா இன்னும் கியூபா போன்ற நாடுகளிலிருந்து இலங்கையின் பொது நன்மை கருதிய பாரிய திட்டங்களுக்கு வந்த கோடான கோடி பணத்தை நீர் எவ்வாறு சூறையாடினீர் என்ற இரகசியம் இந்த நாட்டு மக்களுக்குத் தெரிந்தால் உம்மை பொதுமக்கள் ஒருநாளும் உயிரோடு விட்டுவைக்கமாட்டார்கள்.
ReplyDeleteஇந்தியாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வடக்கு-கிழக்கு வருவதே மக்களுக்கு நன்மை
ReplyDeleteஇதில் இரகசியம் ஒன்றுமே இல்லை உங்களுக்கு உண்மையிலேயே நாட்டுப்பற்று இருந்திருந்தா முதலில் ஏப்ரல் 21இன் மூலம் இந்திய அரசின் அராஜகம் இலங்கையில் எந்த அளவுக்கு தலையிட்டு வந்துள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்
ReplyDelete