மொஹமட் இலியாஸ் என்பவரே மண்ணெண்ணெய் பெற, வரிசையில் நின்று மரணித்தவர் என அடையாளம் காணப்பட்டார்
மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக கண்டி வத்தேகம பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வத்தேகம உடுதலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த அந்த நபர், மழையில் நனைந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment