அத்தியாவசியப் பொருட்களை பெற துடிக்கும் மக்கள், உணர்வு ரீதியான கொந்தளிப்பு வேதனைமிகு தருணங்கள் (வீடியோ) (வீடியோ)
- பாறுக் ஷிஹான் -
நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று (19) பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இருந்த போதிலும் இன்று இம்மாவட்டத்தில் உள்ள நற்பிட்டிமுனை லிட்ரோ எரிவாயு விநியோக நிலைய மொத்த விற்பனை நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட சுமார் 1000 க்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ,சாய்ந்தமருது ,காரைதீவு, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சம்மாந்துறை ,அக்கரைப்பற்று, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன.
ராஜபக்ஷ கைகூலிகள் (20க்கு கையை உயர்த்திய முஸ்லிம் MPக்கள், & உப்புமா கட்சி தலைவர்) க்கு போன் போட்டால் காஸ் கொண்டுவந்து தருவார்களாம்
ReplyDelete