பேரீச்சம்பழத்துக்கான வரி குறைக்கப்பட்டது - இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் ஒரு கிலோ கிராமுக்கான சிறப்பு பண்ட வரி, 199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி, கிலோ கிராம் ஒன்றுக்கு 200 ரூபாயாக அறவிடப்பட்டது.
ரமழான் காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரணம் வழங்கு வகையிலேயே பேரிச்சம்பழத்துக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இது இன்று (28) முதல் அமுலுக்கு வருகிறது.
ஒரு மாதமும் நோன்பு நோற்பதற்கு ஈத்தப்பழம் மாத்திரம் என கணக்கு போடும் அரசு உணவுப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். அது தான் ரமலான் மாதம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு. மேலும் மேலும நெருக்கடியைக் கொடுக்காது எரிவாயுவை பொதுமக்களுககு இலகுவாக கொள்வனவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றது.
ReplyDelete