Header Ads



தாக்­குதல் நடாத்­திய குழு முஸ்­லி­மாக இருந்­தாலும், பின்­ன­ணியில் யார் என்­பதே பிரச்­சினை - சிறில் காமினி


சிங்களத்தில் : பிரியன்த கொடிப்பிலி, தமிழில் : ஏ.ஆர்.ஏ.பரீல்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடாத்­திய குழு முஸ்­லி­மாக இருந்­தாலும் இதன் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார்? என்­பதே இப்­போ­துள்ள பிரச்­சினை. தாக்­கு­த­லுக்கு முன்பு கத்­தோ­லிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் மத்­தியில் கொலை செய்யும் அள­வுக்கு பிரச்­சி­னைகள் எதுவும் இருக்­க­வில்லை. இது அர­சியல் சூழ்ச்சி எனும் சந்­தேகம் நில­வு­கி­றது’ என்­கிறார் ‘ஞானாந்த பிர­தீப’ எனும் சஞ்­சி­கையின் பிர­தம ஆசி­ரியர் சிறில் காமினி.

அவ­ரு­ட­னான நேர்­கா­ணலின் விபரம்;

கேள்வி: உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்­பான விசா­ரணை நீடித்துச் செல்­கி­றது. முன்னாள் பாது­காப்பு செய­லாளர், முன்னாள் பொலிஸ் மாஅ­திபர் ஆகியோர் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு சென்றால் யார் குற்­ற­வா­ளி­யா­கு­வார்கள்?

நாங்­களும் அதையே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். தற்­போ­தைய நிலை­மையில் இந்த விசா­ர­ணை­களின் இறுதி தீர்ப்பு, தீர்­மா­னங்கள் தொடர்பில் எதுவும் தெளி­வாக இல்லை. என்ன நடக்கப் போகி­றது என்­பதை பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் நிலை­மையே எமக்கும் ஏற்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடை­பெற்று மூன்று வரு­டங்­களை அண்­மித்­துள்­ளது.

இரண்டு ஆணைக்­குழு அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இப்­போது ஹேம­சிறி பர்­ணாந்­துவும், பூஜித் ஜய­சுந்­த­ரவும் குற்­றச்சாட்டுகளிலி­ருந்தும் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். மேலும் சுமார் 20 பேருக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. அவர்கள் இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என இனங்­கா­ணப்­பட்­ட­வர்­க­ளாவர். இந்த வழக்­குகள் நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் உள்­ளன. என்­றாலும் அதற்குப் பின்பு உரு­வான புதிய விட­யங்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­ப­டு­கின்­ற­னவா? இல்­லையா? என்­பது பற்றி எமக்குத் தெரி­யாது. இத்­தாக்­கு­தலின் உண்மைத் தன்­மையை வெளிப்­ப­டுத்­துங்கள் என்­பதே எமது கோரிக்­கை­யாகும். ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கை­களை ஆராய்ந்து பார்க்­கும்­போது இத்­தாக்­குதல் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலும் இதன் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்ற சந்­தே­கத்­துக்கு இது­வரை விடை பெற்­றுக்­கொள்ள முடி­யா­ம­லி­ருக்­கி­றது.

இது தொடர்­பாக இது­வரை நடை­பெற்­று­வரும் விசா­ர­ணை­களின் முறை­மை­களை நோக்­கும்­போது உண்மை வெளிப்­ப­டுத்­தப்­ப­டுமா? அல்­லது நீதி வழங்­கப்­ப­டுமா என்­பதில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை.

கேள்வி: முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இவ்­வி­வ­காரம் தொடர்பில் என்ன நடக்கும் என எல்­லோரும் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். நீங்கள் என்ன கூறு­கி­றீர்கள்?

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும், பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் அது போன்று சேனாதி தலை­வ­ரா­கவும் நாட்டின் பாது­காப்பு தொடர்பில் பூரண பொறுப்­பினை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இந்தப் பொறுப்­பி­லி­ருந்தும் விடு­பட அவ­ரினால் முடி­யாது. ஏப்ரல் மாதம் 4ஆம் திக­தி­யி­லி­ருந்து இந்த தாக்­குதல் தொடர்­பான தக­வல்கள் நிலந்த ஜய­வர்­த­ன­வுக்குக் கிடைத்­துள்­ளன. 4 தட­வைகள் இந்தத் தக­வல்கள் கிடைக்கப் பெற்­றுள்­ளதாம். இவை உண்­மை­யான தக­வல்கள். ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் இது தொடர்பில் சாட்­சியம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.


ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன தக­வல்கள் எத­னையும் தான் அறிந்­தி­ருக்­க­வில்லையென்றும், எவரும் தனக்கு தக­வல்­களை வழங்­க­வில்லை என்றும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். என்­றாலும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு இவ­ரது சாட்­சி­யத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பொறுப்­பினை துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ள­தாகவும் அதனால் அவ­ருக்கு எதி­ராக வழக்கு தொடர்­வ­து­பற்றி கவனம் செலுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சியம் என்றும் சட்­டமா அதி­பரின் சிபா­ரிசு உள்­ளது.

கத்­தோ­லிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் மத்­தியில் கொலை செய்யும் அள­வுக்கு பிரச்­சி­னைகள் எதுவும் இருக்­க­வில்­லை­யல்­லவா? அதனால் இது அர­சியல் சூழ்ச்சி எனும் சந்­தேகம் நில­வு­கி­றது. அதா­வது அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வது மற்றும் 

அதி­கா­ரத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் தேவைப்­பாடு இதன் பின்னால் இருந்துள்ளது எனும் சந்­தே­கங்கள் அதி­க­ரிக்­கின்­றன.

முன்னாள் ஜனா­தி­பதி இத்­தாக்­குதல் தொடர்பில் தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­பதை ஆணைக்­குழு ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்­பது எமக்கு இதி­லி­ருந்து தெளி­வா­கி­றது. அவர் இத்­தாக்­குதல் பற்றி அறிந்­தி­ருந்­தாரா அல்­லது இல்லையா? இதற்குப் பொறுப்புக் கூற வேண்­டுமா? இல்­லையா? என்­பது சட்­டத்தின் மூலமே தெளிவுபடுத்­தப்­பட வேண்டும். நிலந்த ஜய­வர்­த­ன­வுக்கு எதி­ரா­கவும் இது போன்ற சிபா­ரிசு ஒன்று உள்­ளது. அதனால் இவர்­களை பொறுப்­புக்­க­ளி­லி­ருந்தும் வெளியே­று­வ­தற்கு இட­ம­ளிக்க வேண்டாம் என்றே நாங்கள் கூறு­கிறோம். மேலும் பலர் இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள். அவர்கள் அனை­வ­ருக்கும் எதி­ராக சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஒரு­வரை இலக்கு வைக்­கு­மாறு நாம் கூற­வில்லை. பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் யாராக இருந்­தாலும் சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு சட்­டமா அதிபர் கட­மைப்­பட்­டுள்ளார். ஆனால் இது நடை­பெ­றா­மையே பிரச்­சி­னை­யாகும்.

கேள்வி : இந்த தாக்­குதல் பற்றி மூன்று வருட கால­மாக கர்­தினால் அடிக்­கடி அறிக்­கைகள் விடு­கிறார். ஆனால் அர­சாங்கம் இது பற்றி கவ­னத்தில் கொள்­வ­தில்லை. அர­சாங்கம் கர்­தி­னாலைக் கூட கணக்­கெ­டுப்­ப­தில்லை அல்­லவா?

அதுதான் எங்­க­ளுக்கும் உள்ள பிரச்­சினை. இது தொடர்­பான எத­னையும் அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­வ­தில்லை. அர­சாங்கம் என்று ஒன்று இருப்­பது மக்­க­ளுக்­கா­க­வல்­லவா? அர­சாங்கம் மக்­க­ளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். இது போன்ற பாரிய தாக்­குதல் ஒன்று இடம்­பெற்ற பிறகு அது பற்றி முறை­யான விசா­ர­ணை­களை நடாத்தி உண்­மையை நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது, குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்­டி­யது சட்­டமா அதிபர் திணைக்­களம், பொலிஸ், இர­க­சிய பொலிஸ் பிரிவு என்­ப­வற்றின் பொறுப்­பாகும். இந்தப் பொறுப்பு சரி­யாக நிறை­வேற்­றப்­படும் நிலைமை இங்கு இல்லை. இது பற்றி தெரி­விக்­கப்­ப­டு­பவை தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­டு­வ­தில்லை.

கர்­தினால் அவர்­களும் இது பற்றி பல தட­வைகள் கூறி­யி­ருக்­கிறார். அர­சாங்கம் என்ன செய்யப் போகி­றது என்று நாம் பார்த்துக் கொண்­டி­ருக்­கிறோம். அர­சாங்கம் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­களம் இந்த தாக்­குதல் சம்­ப­வத்தை மூடி மறைப்­பது ஏன் என்ற சந்­தே­கமே எம்­மத்­தியில் நில­வு­கி­றது. பொறுப்புக் கூற­வேண்­டி­ய­வர்கள் உண்­மையை வெளிப்­ப­டுத்தத் தயங்­கு­வது ஏன் என்று பல்­வேறு சந்­தே­கங்கள் எழு­கின்­றன. கர்­தினால் உட்­பட ஏனை­ய­வர்கள் கூறு­ப­வை­களை கேட்­ப­தற்கும் அதில் கவனம் செலுத்­து­வ­தற்கும் அர­சாங்கம் செவி­சாய்க்­காமை சிக்­கலை உரு­வாக்­கி­யுள்­ளது.

கேள்வி : கர்தினால் முதல் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அல்லவா?

இது தான் இப்­போது நடந்­தி­ருக்­கி­றது. 69 இலட்சம் மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள் அல்­லவா? கியூ வரி­சை­களில் நிற்கும் மக்கள் இதைக் கூறு­கி­றார்கள். சமூக ஊட­கங்கள் பல்­வேறு கருத்­து­களை வெளியிடுகின்றன.ஒரு பதிவு இவ்வாறு கூறுகிறது. “குற்றச்செயல்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு வருவதை நோக்கினால் அனைவரும் விடுதலையாகி இறுதியில் கர்தினால் அவர்கள் சிறைக்குச் செல்லும் நிலைமைதான் உள்ளது” உண்மையில் இது தான் மக்களின் நிலைப்பாடு. இறுதியில் இத்தாக்குதல் தொடர்பில் பேசுபவர்களே குற்றவாளியாவார்கள்.

நன்றி : ஞாயிறு லங்காதீப,  -Vidivelli-

No comments

Powered by Blogger.