பஸ், கொள்கலன், ரயில் கட்டணங்களும் உயருகிறது
நாளை(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொள்கலன் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் ஒன்றிணைந்த சங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், இன்று(13) முதல் கொள்கலன் போக்குவரத்துக் கட்டணத்தை 60 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணத்திற்கு இணையாக, ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment