சமஷ்டி தீர்வினை வழங்கினால் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களும், புலம்பெயர் மக்களும் ஒத்துழைப்பு வழங்குவர்
நாட்டின் பாதுகாப்பு செலவினங்களை குறைத்துக் கொள்ளாத வரையில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தணிக்க முடியாது என்றும், சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் சீ.வி.விக்னேஸ்வரன் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சி மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் அறிவித்துள்ள சீ.வி.விக்னேஸ்வரன், அரசாங்கம் தமது கொள்கைகளை சீராக்கி சரியான தீர்மானங்களை எடுத்து, சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்க முன்வந்தால், அரசாங்கத்துக்கு தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment