Header Ads



நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க, ஒரு வருடகால அவகாசம் கோரிய நிதி அமைச்சர்


நாட்டில் ஏற்பட்டுள்ள சகல பொருளாதார நெருக்கடிகளையும் தீர்ப்பதற்கு தனக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற சந்திபொன்றில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பிரமித பண்டார தென்னகோன், எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் நீண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நிதியமைச்சர் இந்தப் பிரச்சினைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்து அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண ஓராண்டு கால அவகாசம் கோரியுள்ளார்.

2 comments:

  1. அப்போ, ஒரு வருசம் முடியும் மட்டும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சோறு போடுவது நீங்கலா?

    ReplyDelete
  2. இன்னும் 10 ஆண்டுகள் சென்றாலும் இலங்கையின் வங்குரோத்து நிலமை மாறாது.
    TNA வடக்கு கிழக்கை இந்தியாவுடன் இணைக்க முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.