Header Ads



புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டொக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் சாதனை


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

இவ்வருடம் இடம்பெற்ற ஜந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்திலுள்ள டொக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.

இவ்வாண்டில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில்  88 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் 10 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தியடைந்துள்ளனர்.

மாணவி நௌபி பாத்திமா திக்ரா 190 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏறாவூர் கோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பிரிவு இறுதிப்  பாடசாலை இதுவாகும்.

பெரும் போராட்டங்களுக்கும் பல தியாகங்களுக்கும் மத்தியில் நீதிமன்ற ஆணையுடன் உருவாக்கப்பட்ட இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பலரின் நேரடி மறைமுக ஒத்துழைப்புக்கள் இன்றுவரை கிடைத்து வருவதாக பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.