எதிர்வரும் எந்த தேர்தலிலும் பொதுஜன பெரமுன வெற்றிபெறும் - சாகர காரியவசம் சூளுரை
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் தொடர்பில் எந்த சவாலும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளும் தரப்பாகவும் பாராளுமன்று குழுவாகவும் மிகவும் வலுவாகவும் நிலையானதாகவும் முன்னோக்கி செல்லும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்துள்ள அனைவர் குறித்தும் முழு நம்பிக்கை உள்ளது.
அனைத்து நேரங்களிலும் தேவையான அனைத்து பலத்தையும் வழங்குவதாக அவர்கள் உறுதியாக உள்ளனர்.
அரசாங்கத்தின் பெரும்பான்மை குறித்து கட்சி ஆதரவாளர்கள் அச்சமோ சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் வலுவாகவும் நிலையானதாகவும் முன்னோக்கி நகர்ந்து வருவதுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு சவால் விடுக்கும் அனைவருக்கும் பதில் அளிக்கும வகையில் எதிர்வரும் எந்த ஒரு தேர்தலிலும் அரசாங்கம் பெரு வெற்றிபெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஷம்ஸ் பாஹிம்
Post a Comment