Header Ads



ராஜபக்ச குடும்பத்திலிருந்து இன்னொருவர் ஆட்சிக்கு வருவதை உறுதிப்படுத்துவதே வீரவன்ச, வாசு, கம்மன்பில ஆகியோரின் நோக்கம்


விமல்வவீரவன்ச உதயகம்மன்பில வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் நடவடிக்கைகளின் பின்னால் இரகசிய நோக்கங்கள் உள்ளன என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த அவர் ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு உறுப்பினர் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்ய முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூவரினதும் கடந்தகாலங்களை  ஆராயும்போது அவர்கள் மக்கள் தங்களிற்கு வழங்கிய ஆணையை காப்பாற்ற முயல்கின்றனர் நிதியமைச்சருக்கு எதிரான இன்னொரு உறுப்பினருக்கு உதவ முயல்கின்றனர் என்பது தெளிவாகின்றது என ஹிருணிகா   தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.